முதியோர் இல்லத்தில் நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண் – சந்தேகத்தில் பொலிஸார்

46 0

ஹொரணை  பிரதேச முதியோர் இல்லத்தில் நாற்காலியில் சடலமாக காணப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

88 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக முதியோர் இல்லத்தின் பாதுகாவலர்  ஹொரணை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார்  முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து சடலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில்  பிரேத பரிசோதனை ஹொரணை ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சுமேதா குணவர்தனவின் உத்தரவின் பேரில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.