ரக்பி வீரர் கொலை – சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

321 0

thajudeenரக்பி வீரர் வசிம் தாஜூதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட் பிரதி காவல்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டிய காவல்நிலைய குற்ற விசாரணை பிரிவின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரி சுமித் ஷம்பத் ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இவர்களை எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார்.
இந்த கொலை தொடர்பான தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் கீழ், நாரஹேன்பிட்டிய காவல்நிலைய குற்ற விசாரணை பிரிவின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரி சுமித் ஷம்பத் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அந்த விசாரணையின் ஒரு நடவடிக்கையாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட் பிரதி காவல்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.