கொழும்பு மருதானை பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இன்று வியாழக்கிழமை (18) தீ பரவியுள்ளது.
இந்நிலையில் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புத் பிரிவினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

