கொலை தொடர்பில் தேடப்பட்டவர் மாத்தறையில் கைது!

63 0

கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 16ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவரைத் தாக்கி  கொன்ற சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை (17) சந்தேக நபர் மாத்தறை வெரதுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் 33 வயதான நாகுலகமுவ, கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்.

சந்தேக நபர் இறந்தவரின் மருமகன் என்பதும் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை  இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.