உலகின் மூலசக்தி எது? -அகரப்பாவலன்-

169 0

இந்த உலகத்தை ஆளும்
மூலசக்திகளிடம்
மனிதாபிமானம் இருக்கின்றதா?

எந்தத் தேவைகளுக்காக
போர்கள் நிகழ்த்தப்படுகின்றன?
யார் லாபம் பெற
இவைகள் நடந்தேறுகின்றன?

இதன் விடையை நெருங்கும் போது
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின்
காரணங்கள் மனத்திரையில்
தெளிவாகத் தெரிகின்றது..

உலகப் பொருளாதாரத்தை
தமது கட்டுப்பாட்டில் வைத்து
ஆயுத பலத்தை
தமது சக்திக்குள் மட்டும்
தக்கவைத்து
இந்த உலகையே
தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
சக்தி எது?

அந்தச் சக்தியின்
ஒரே நோக்கு
“சுயநலமே”

அந்தச் சக்தியைச் சேர்ந்தவர்கள்
உலகுள்ளவரை
அனைத்தையும் அனுபவிக்க
ஆற்றும் செயலே இவைகள் ..

நீதி ..நியாயம்..
பாவம் ..புண்ணியம்..
என்ற கொள்கையை மிதித்து
அதன் மேல்
சாம்ராச்சியம் நடத்துபவர்கள்..

உலக அரசியலின்
எழுச்சி! வீழ்ச்சி!
இவர்கள் கைகளிலே..
இவர்கள் நினைப்பதே
உலகில் நடந்தேறும்..
“இயற்கைச் சீற்றம் தவிர”

சிங்களத்தால் எம்மை
அழித்திருக்க முடியுமா?
அது உலகறிந்த உண்மை..
இந்த உலகை ஒன்று கூட்டி
எம்மை அழித்த
சக்தி எது?

தமிழா ! நாம்
உலகெங்கும் பரந்து வாழ்கின்றோம்
அந்த மூல சக்திகளின்
நிகழ்ச்சி நிரலின் ஓட்டத்தை
நம் பக்கம் திரும்புவோம்
அப்பொழுது
அவர்கள் பார்வை
நம் பக்கம் திரும்பும்..
அவர்கள் செவிகளில்
நமது ஒலி கேட்கும்..

ஓங்கி ஒலிக்கும்
எமது குரல்கள்
அவர்களின் நிகழ்ச்சி நிரலைச் சேரும்
அவர்களின் எண்ண மாற்றத்துக்கு
வழிகோலும்..
அது அவர்களின் தேவையாக அமையும் ..

ஒன்று படுவோம்
ஒற்றுமைப் பலம் பெறுவோம்
ஒருநோக்கில் செல்வோம்
தமிழீழ இலக்கினை அடைவோம்.
-அகரப்பாவலன்-