மாமனிதர் சிவநேசனின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது

292 0
மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்புயாழ்.கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் உணர்வாளருமான மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள்  அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆத்மா சாந்தியடைவதற்காக மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் சி.த. காண்டீபன் தலைமையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரது நினைவுரைகளும் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் க.கிருஷ்ணகுமார், மற்றும் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் இ.முரளிதரன் உள்ளிட்டவர்கள் அமரர் மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களை ஆழமாக நேசித்த மாமனிதர் கிட்டினன் சிவநேசன் தமிழ்மக்களின் விடிவிற்காக பாராளுமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுத்த உத்தமராவார்.