சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

103 0

ர்வதேச ஊடக தினமான மே 3 ஆம் திகதி ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தின் முன்றலில் இன்று  பகல் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகவியலாளர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.