லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புதிய இயக்குநர்: சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்

63 0

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஓய்வுபெற்ற நிலையில், புதியஇயக்குநராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சிபிசிஐடிக்கு புதிய கூடுதல் டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து உள்துறை செயலர் க.பணீந்திரரெட்டி வெளியிட்ட அறிவிப்பு: தமிழக காவல் துறையின் சிபிசிஐடி பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த அபய் குமார்சிங், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக (கூடுதல் டிஜிபி) நியமிக்கப்பட்டுள்ளார். தலைமையக கூடுதல் டிஜிபியாக இருந்து கூடுதலாக நிர்வாகப் பிரிவையும் கவனித்து வந்த ஜி.வெங்கட்ராமன் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல், செயலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி பி.பாலநாக தேவி, நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, தலைமையக பணியும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபி எச்.எம்.ஜெயராமுக்கு செயலாக்கப்பிரிவு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பணீந்திர ரெட்டி உத்தரவில் தெரிவித்துள்ளார்.