அரசாங்கத்தின் அண்மைய செயற்பாடுகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகவும் , மேலும் சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டும் நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு ஆதரிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
வெளிப்படைத்தன்மை இன்மை
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்னர், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் 200 நாட்களை எடுத்துக் கொண்டது.
இந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் பாராளுமன்றத்தினூடாகவோ அல்லது அரசாங்க நிதி பற்றிய குழுவின் ஊடாகவோ உரிய உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடவில்லை.
அரச நிதித் துறையை வலுப்படுத்துதல்
அரச நிதித் துறையை வலுப்படுத்தும் பணியில், வருவாயை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு, அதற்கு ஏற்ப முக்கிய செலவுக் குறைப்பு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
நியாயமற்ற வரிச்சுமை
வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஏற்கனவே வரி வலையில் சிக்கியுள்ள உழைக்கும் மக்கள் மீதான வரிகளை மேலும் அதிகரிக்க எளிதான வழியை மேற்கொள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளது. வரி எல்லைகள் குறைக்கப்பட்டு, வரி விகிதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
மக்கள் ஏற்கனவே உயர் பணவீக்கம், அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருக்கம் உயர் வருமானக் குழுக்களின் பலத்தைப் பயன்படுத்தி வரி வலையை விரிவுபடுத்துதல் மற்றும் வரி வசூல் முறைகளுக்கு உத்தரவாதம் அளித்து அர்ப்பணிப்புடன் செயற்படல் காணப்படவில்லை. சொத்து மற்றும் வள பரம்பரைக்கு உரிய வரிகள் மூலம் பணக்காரர்கள் மீது வரிகளை விதிக்கும் பணி 2025 இல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு வலையமைப்புகள்
இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக சமூகத்தின் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு நிதியுதவி மூலம் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படல் வேண்டும்.துஷ்பிரயோகம் செய்ய முடியாத முறையின் அறிவியல் ரீதியாக நிவாரணம் பெறத் தகுதியான மக்களை சரியான முறையில் கண்டறிந்து நிவாரணம் வழங்கு வேண்டியிருந்தாலும் நிவாரணத்தை வழங்குவதற்காக மக்களைத் தெரிவு செய்யும் போது அரசியல்மயப்படுத்தப்பட்ட செயல்முறையை தொடர்ந்தும் பயன்படுத்த அரசாங்கம் முன்மொழிகிறது.
நிதித் துறையின் ஸ்திரத்தன்மை
இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் மூலம் நிதிச் சேவைத் துறையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முறைமை காணப்படாமை, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையானது பணப்புழக்கம் மற்றும் மூலதனப் போதுமான அளவு ஆகிய இரண்டிலும் உள்நாட்டு வங்கி அமைப்பை சீர்குலைத்து உள்நாட்டு வங்கித் துறைக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையானது ஊழியர் ஓய்வூதிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் போன்ற நிதியங்களின் மதிப்பையும் கடுமையாகக் குறைக்கும்..
பொறுப்புக்கூறல் , ஊழல் எதிர்ப்பு
ஊழலைத் தடுப்பது தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கு முன்முயற்சி எடுப்பதாக சனாதிபதியோ அல்லது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் எந்தவொரு உறுப்பினரோ உறுதியளிக்கவில்லை.
மேற்கூறப்பட்ட காரணிகளின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது வீண் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும்.

