அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவு எழிச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நாளும்.-பெல்யியம்.

123 0

நேற்றைய தினம் 23.04.2023 ஞாயிறு நாட்டுப்பற்றாளர்கள் நினைவேந்தல் நிகழ்வு மதியம் 3 மணியளவில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.முதன்மை நிகழ்வாக பொதுச்சுடரினை திருமதி அமலதாஸ் சிலோசனா அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படத்துக்கு உறவினர்கள் ஈகை சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்கள்.அகவணக்கத்துடன் கலை நிகழ்வுகள் ஆரம்பமானது .நினைவு சிறப்புரை கவிதைகள்,நடனம்,பேச்சு,தாயகப்பாடல் இடம் பெற்று தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.