மருதங்கேணியில் மணல் அகழ்விற்கு புதிய அனுமதி!

84 0

யாழ். வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் இவ்வருடம் 2023ஆம் ஆண்டு மணல் அகழ்விற்கு புதிய அனுமதிகள் வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது.

குறிப்பிட்ட பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் மணல் அகழ்வுகளை நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு முறைப்பாடுகளை தெரிவித்து வரும் நிலையில் புதிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த 08.03.2023 அன்று தகவல் அறியும் சட்டமூலத்தின் கீழ் வினவப்பட்ட கேள்விக்கு சுமார் ஒரு மாதங்கள் கடந்த நிலையில் மருதங்கேணி பிரதேச செயலகத்தால் பதில் வழங்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக தகவல் அறியும் சட்டமூலம் வழங்கப்பட்டு 13 அலுவலக நாட்களில் தகவல் கோருபவருக்கான பதிலை வழங்க வேண்டும் என 2016ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலையும் சட்டமூலத்தில் குறித்த பகுதியில் மணல் அகழ்விற்கு அனுமதி வழங்குவது யார்? யார் ஊடாக மணல் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது? 2023 பின் புதிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு, தாம் அனுமதி வழங்குவதில்லை மற்றும் 2023 பின்னர் புதிய மணல் அகழ்வு இடம் பெற்றுள்ளது என தகவல் வழங்குவதற்கு ஒரு மாதம் கடந்துள்ளது என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச செயலக தகவல் உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மருதங்கேணி பிரதேச செயலகப் பகுதியில் 2023 தொடக்கத்தில் இருந்து அம்பன் கிழக்கு கிராம அவிருத்தி சங்கத்தின் ஊடாக யாழ். மாவட்டத்துக்கான புதிய மணல் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி புவிச்சரிதவியல் அளவீட்டு சுரங்கங்கள் பணியகத்தால் வழங்கப்படுவதாகவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெறுவதால் எதிர்காலத்தில் பல பகுதிகள் நீரில் மூழ்கக் கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் எழுத்து மூலமாக கடிதங்களை வழங்கியும் புதிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.