இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியிருந்த அமைதிப் பேரணி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.