தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நாளை நல்லூரடியில்

86 0

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இதன்போது நாளை (19.04.2023) அன்னை ஈகைச் சாவினைத் தழுவிக்கொண்ட நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை 5 மணிக்கு நடைபெறும்.

இவ் நினைவேந்தலில் ஈகைச்சுடரினை தியாகத்தாய் அன்னை பூபதியின் பேத்தி ஏற்றிவைக்கவுள்ளார்.

அனைவரையும் இவ் அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.