தம்பலகாமத்தில் விபத்தில் 16 பேர் காயம்

260 0

கந்தளாய் – திருகோணமலை பிரதான வீதியில் தம்பலகாமம் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயமடைந்தனர்.

கந்தளாய் நோக்கி பயணித்த ட்ரக்டர் ரக வாகனம் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த சிறிய ரக பாரவூர்தி ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் சிறிய கர பாரவூர்தியில் பயணித்த 16 பேரே காயமடைந்துள்ளனர்.

கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ட்ரக்டர் மற்றும் சிறிய ரக பாரவூர்தி ஆகியவற்றின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.