சிறைக்கைதிகளை சந்திக்க வாய்ப்பு !

75 0

புதுவருடப்பிறப்பை முன்னிட்டு 3 தினங்களுக்கு சிறைக்கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு இந்த வாய்ப்புகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறையிலுள்ள கைதிகளை சந்திப்பதற்காக சிறைச்சாலைகளுக்குச் செல்லும் உறவினர்கள் ஒருவருக்கு போதுமான உணவு பொதி மற்றும் இனிப்பு பண்டங்களை  எடுத்துச் செல்ல முடியுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துளு்ளது.

இதேவேளை, தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல சிறைச்சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.