கந்தானை மசாஜ் நிலையத்தில் சடலம் மீட்பு !

128 0

கந்தானை பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுமார் 42 வயதுடைய திருமணமானவர் என தெரியவந்துள்ளது.

கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று (11)  நள்ளிரவு மசாஜ் நிலையத்துக்குச் சென்றிருந்த நிலையில் இன்று காலை அந்த நபர் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.