எல்லை நிர்ணய அறிக்கை தயார் ; கையளிப்பதற்கான திகதியை எதிர்பார்த்திருக்கிறோம்

257 0

புதிய எல்லை நிர்­ணய அறிக்­கை இறுதி செய்யப்பட்டுள்ளது. கையளிப்பதற்கான திகதியை பிரதமரிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என எல்லை நிர்­ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரிவித்தார்.

எல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் தொகை­யினை அரை­வா­சி­யாகக் குறைக்கும் நோக்கில் நிய­மிக்­கப்­பட்ட எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை தயார் நிலையில் உள்­ளது.

இவ்­வ­றிக்கை விரைவில் பிர­த­மரும் பொது நிர்­வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்­த­ன­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.  அதற்கான திக­தி­யொன்­றினை ஒதுக்கித் தரு­மாறு தான் பிர­த­ம­ரிடம் கேட்டிருக்கிறேன்.

அத்துடன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தற்­போ­தைய உறுப்­பினர் தொகை சுமார் 8500 இலிருந்து 4714 ஆக குறைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு எண்­ணிக்­கையை குறைக்கும் வகை­யிலே எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இந்த உறுப்­பினர் தொகையில் தேர்­தல்கள் ஆணைக்­குழு மாற்­றங்­களை செய்ய முடியும்.

அத்துடன்  341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் 340 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்­லைகள் மீள் நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ள­ன. கல்­முனை மாந­கர சபை தொடர்­பான வழக்­கொன்று நீதி­மன்றில் விசா­ர­ணையின் கீழ் உள்­ள­தா­ல் அச்­ச­பைக்­கான எல்லை நிர்­ணயம் கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை.

ஒன்­பது மாகா­ணங்­களைச் சேர்ந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணய அறிக்கை தனித்­த­னி­யாக மாகாண ரீதியில் சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் ஆகிய மூன்று மொழி­க­ளிலும் மொத்தம் 27 அறிக்­கைகள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை தொடர்பில் முறைப்­பா­டுகள் முன்வைக்கப்பட்டால் மீளாய்வுக் குழுவொன்றினை நியமித்து அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அதிகாரமுண்டு என்றார்.