பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான இந்திய அரசாங்கத்தின் புலமைப் பரிசில்கள்

63 0

க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்ளும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுவருகின்றன. 

க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த  அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்த மாணவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள்.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் இப்புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள்  இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

அல்லது இந்திய உயர் ஸ்தானிகராலயம், (36-38 காலி வீதி, கொழும்பு 03) மற்றும் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம், (இல. 01A,  மஹமாய மாவத்தை, த.பெ.இலக்கம்- 47, கண்டி) ஆகிய முகவரிகளில் விண்ணப்பப் படிவங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோர்களது சமீபத்திய சம்பளத்தாள் விபரம் மற்றும் பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் போட்டோ பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கௌரவ செயலாளர், CEWET மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம்,  த.பெ.இலக்கம்-882, கொழும்பு-03 என்ற முகவரிக்கு 2023 ஏப்ரல் 29ஆம் திகதிக்கு முன்னதாகக் கிடைக்கும் வகையில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்படுதல் வேண்டும்.