மனோ கணேசனை பாராட்டும் செல்வம்

71 0

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் என்ற அபார முயற்சியைப் பாராட்டுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் காலங்களில் மனோ கணேசனுடன் உறுதுணையாக சேர்ந்து பயணிப்பதற்கு தயாராக உள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு மின்னஞ்சல் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் போதே ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.