மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04) பாராளுமன்றில் அறிவித்தார்.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்புவதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்றையதினம் பாராளுமன்றில் உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை அறிவித்த சபாநாயகர் மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் சபையில் நிறைவேற்ற முடியும் எனவும் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.