சசிகலா ஆதரவு எம்.பி.,க்களுடன் ஆலோசனை

233 0

சசிகலா ஆதரவு,எம்.பி.,க்களுடன், தினகரன் ஆலோசனை நடத்தினார்.

சசிகலா ஆதரவு, எம்.பி.,க்கள் கூட்டம், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், சசியின் அக்கா மகன் தினகரன் தலைமையில் நடந்தது.

எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகும் லோக்சபா கூட்டத் தொடரில், எம்.பி.,க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என, ஆலோசிக்கப்பட்டது.

அதற்கு முன், தமிழக அமைச்சர்கள், லோக்சபா துணை சபாநாயகர்தம்பிதுரை மற்றும் மூத்த எம்.பி.,க்களுடன், தினகரன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பன்னீர்செல்வம் தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு, உடனுக்குடன் பதில் அளிப்பது, கட்சியினர் அவர்கள் பக்கம் செல்வதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டுள்ளது.