தெதுரு ஓயா சபத்து பாலத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெறும் போது முச்சக்கரவண்டியில் 4 பேர் பயணித்துள்ளனர்.
இதன் போது , இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் , மேலும் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களில் பெண் குழந்தையொன்றும் அடங்குவதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.
காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.