வட பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது

76 0

யாழ். பல்கலைக்கழக வளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் உட்பட அந்த பெண்ணிடம் போதைப்பொருள் வாங்கும் 10 வாடிக்கையாளர்களும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (29.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான அணியினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர்களில் ஒருவராக யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவரும் அடையாளாம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.