சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது!

113 0

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நடமாடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு மற்றும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமான முறையில் போக்குவரத்துச் சேவைகளை வழங்கி தரகர்களாகச் செயற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இந்த நான்கு சந்தேக நபர்களும் உரிய அதிகாரியின் அனுமதியின்றி இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் கிம்புலபிட்டிய, கட்டுநாயக்க மற்றும் மினுவாங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த 53, 46, 39 மற்றும் 35 வயதுடையவர்களாவர்.