பாராளுமன்ற அமர்வை மட்டுப்படுத்த தீர்மானம்

139 0

அடுத்த வாரத்திற்குரிய பாராளுமன்ற அமர்வு ஒரு நாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை மாத்திரம் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பிலான செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.