இஸ்ரேலிய நீதித்துறை மறுசீரமைப்புக்கு எதிராக லட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

71 0

இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக கரது;துத் தெரிவித்த பாதுகாப்பு அமைசச்ர் யொவாவ் கலன்ட்டை பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

அதையடுத்து, லட்சக்கணக்கான மக்கள் இம்மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக டெல்அவிவ் நகரில்  ஆர்ப்பாங்களில் ஈடுபட்டனர்.

இம்மறுசீரமைப்புத் திட்டம் பிரிவினைகளை ஏற்படுத்துவதாhல் அத்திட்டத்தை ஒரு மாதத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என கலன்ட் கூறினார்.

அதையடுத்தே பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து அவர் நேற்று நீக்கப்பட்டுள்ளார். பிரதமர் நெத்தன்யாஹுவின் நெருக்கிய சகாவாக கலன்ட் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

உத்தேச மறுசீரமைப்புத் திட்டடமானது நீதித்துறை செயற்பாடுகளில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து, அரசியல்வாதிகளுக்கு அதிக கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்குகிறது. இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட இது குறித்து கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.