புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி!

82 0

எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை எந்தவொரு நபருக்கும் இந்த அனுமதியை பெற்றுக் கொள்ள உரிமை உண்டு என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கும் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.