வதிரி – திக்கம் வீதி, தேவரையாளிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞரை 2 கிலோ 90 கிராம் கேரள கஞ்சாவுடன் நெல்லியடிப் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக நெல்லியடியில் உள்ள தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

