வாள்கள், கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

126 0

கைத்துப்பாக்கி மற்றும் நான்கு கூரிய வாள்களுடன் மினுவாங்கொடை, அஸ்ஸன்னவத்தை பிரதேசத்தில் கைது ஒருவர் செய்யப்பட்டதாக மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் கூரிய வாள்களுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
44 வயதான சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் கூரிய வாள்களை வைத்திருந்தமையால் குற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.