அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுசெயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்படுமா? என்ற கேள்வி தொடர்ந்தும் பதிலின்றி தொக்கு நிற்கிறது.
இது தொடர்பில் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் பதிலளிக்காதுள்ளன.
எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பொதுநிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.