வவுனியா, நெளுக்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் ஒருவர் புதன்கிழமை (22) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள குறித்த இளைஞனின் வீட்டில் யாரும் இல்லாத போது தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.
வீட்டார் வந்த போது குறித்த இளைஞன் தூக்கில் தொங்குவதை அவதானித்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.