இன்று (22) காலை அவிஸ்ஸாவெல்லையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்க வேண்டிய புகையிரதம் இன்று (22) பயணிக்கவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து அவிஸ்ஸாவெல்ல நோக்கி பயணித்த குறித்த புகையிரதம் மீகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு தடம் புரண்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்காரணமாக அவிஸ்ஸாவெல்லவில் இருந்து காலைப் பயணத்திற்கு வேறு புகையிரதத்தை ஈடுபடுத்த முடியாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

