மெக்ஸிக்கோவில் வானவேடிக்கை தயாரிக்கப்பட்ட வீட்டில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் பலி

76 0

மெக்ஸிக்கோவில் சட்டவிரோதமாக வானவேடிக்கைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்த வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்ஸிக்கோ சிட்டியிலிருந்து 50 கிலோமீற்றர் தூரத்திலுள்ள டோட்டோபான் நகரில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரகசியமாக வானவேடிக்கைகள் தயாரிக்கப்பட்டு, களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.