IMF நிபந்தனைகள் யாது? சதி முயற்சிகள் என்ன?

122 0

IMF நிபந்தனைகள் யாது? தேர்தலை ஒத்திவைக்கும் சதி முயற்சிகள் என்ன? போராட்டக்காரர்களுக்கு எதிராகபயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகையின் தரத்தை வெளிப்படுத்துங்கள் என்றவாறு அரசாங்கத்திற்குவினாப்பத்திரங்களை முன்வைத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட நிபந்தனைகளை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தவேண்டும் எனவும்,தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் மக்கள் விரோத அரசாங்கம் கூறும் செய்தி பாரதூரமானதுஎனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அண்மைக்காலமாக போராட்டங்கள் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகையின் தரம்மற்றும் அவற்றின் உள்ளார்ந்த தன்மை குறித்து உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும்எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கோரிக்கை விடுத்தார்.

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய சபை அமர்வில் எழுப்பிய கேள்விகள்.

நாட்டின் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் காரணமாகக் கொண்டு பின்வரும் விடயங்களை தேசியமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளாகக் கருதி அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும்விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

01.சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்ட ஒப்பந்தம்நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாது?

02. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம், மறுசீரமைப்புக்கு ஆளாகும் அரச நிறுவனங்கள் மற்றும் அரசுக்குசொந்தமான நிறுவனங்கள் யாது?

03. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய நிபந்தனைகள் என்ன? அந்த ஒப்பந்தத்தை இவ்வாரம் இந்தசபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?

04. மக்கள் ஆணை இன்மையால் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கம்,சர்வதேச நாணய நிதியம் மற்றும்ஏனைய தரப்புகளுடன் மேற்கொள்ளும் உடன்படிக்கைகள் மற்றும் தீர்மானங்களுக்கு மக்களின் ஆணையைப்பெறுவது எவ்வாறு?

05. சரியான நேரத்தில் தேர்தலை நடத்தாத ஓர் நாட்டை ஜனநாயக நாடு என எங்கனம் அழைக்க முடியும்?

06. இந்த ஆண்டு தேர்தல் எதனையும் நடத்த அரசாங்கம் திட்டமிடவில்லையா?

07. அவ்வாறு இல்லாவிட்டால்,இரண்டாவது தடவடையாகவும் திகதி குறிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை நிதியமைச்சு

தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்காமைக்கான காரணங்கள் யாது?

08. அரச அச்சகரால் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் கோரப்பட்ட தொகைஎவ்வளவு?

09. அவ்வாறு கோரப்பட்ட தொகையில் எவ்வளவு தொகை இப்போது வழங்கப்பட்டுள்ளது? இன்னும் எவ்வளவுதொகை அரச அச்சகத்திற்கு கொடுக்க வேண்டும்? அந்த தொகையை எப்போது மட்டில் கொடுக்க முடியுமாகஇருக்கும்?

10. புதிய வருமான வரிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம்,கடந்த 2 மாதங்களில் அரசுக்கு கிடைத்துள்ளவருவாய் எவ்வளவு?

11. கடந்த காலத்தில் தொழில் வல்லுநர்களால் புதிய வருமான வரிச் சட்டத்தில் என்ன திருத்தங்கள்முன்மொழியப்பட்டுள்ளன? அந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் சம்மதிக்கிறதா?

12. புதிய வருமான வரிச் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் செய்வதை எதிர்பார்ப்பதாக இருந்தால்,அது எந்தமுறையில் மேற்கொள்ளப்படும் என்பதை விளக்குமா?

13. அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் நுழைந்து மாணவர்களை தாக்கியசம்பவம் தொடர்பில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களால் கோரப்பட்ட அறிக்கை மற்றும் அதன்படிஎடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் யாது?

14. கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய இராணுவத் தளபதி அல்லது பொலிஸ் மாஅதிபருக்குத் தெரியாத படைகள் பயன்படுத்தும் சீருடைக்கு இணையான சீருடை அணிந்த தடி ஏந்திஇருந்தவர்கள் யார்?

15. குறித்த அறியப்படாத குழுவிற்கு கட்டளை பிறப்பித்தது யார்? இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டவிசாரணைகளின் முன்னேற்றம் யாது?

16. கடந்த காலங்களில் போராட்டங்களைக் கலைக்க அரசாங்கம் பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக்குண்டுகளால் பலர் உயிரிழந்தனர்.இரசாயன விஷ கலவையா இதற்கு காரணம்? அல்லது காலாவதியானகண்ணீர்ப்புகையை பயன்படுத்தியமையா இதற்கு காரணம்?

17. 2022 மே 9 ஆந் திகதி அன்று அலரி மாளிகை அருகில்,2022 ஜூலை 13 ஆந் திகதி அன்று,பிரதமர்அலுவலகம் அருகில்,

2023 பெப்ரவரி 26 ஆந் திகதி அன்று லிப்டன் சுட்டுவட்டத்திற்கு அருகில் மற்றும்,2023 மார்ச் 07 ஆந் திகதிஅன்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களைக் கலைக்கபயன்படுத்தப்பட்ட CS Shells மற்றும் CS Grenade கண்ணீர் புகை குண்டுகளின் உற்பத்தி திகதிகள் மற்றும்காலாவதி திகதிகள் யாது?

18. குறித்த போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட CS Shells மற்றும் CS Grenade கண்ணீர் புகை குண்டுகளின்தரத்தை உறுதி செய்ய முறையான ஆய்வக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதா? குறித்த பரிசோதனைஅறிக்கையை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா?அவ்வாறு சமர்ப்பிக்க முடியாது என்றால் ஏன் முடியாது?

19. மேலும் 15,000 CS Shells மற்றும் CS Grenade கண்ணீர் புகை குண்டுகளை கொள்வனவு செய்யஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதா? இதற்காக மதிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு?