வெல்லவாயவில் நீராடிய காத்தான்குடி, அக்கரைப்பற்றைச் சேர்ந்த நால்வரைக் காணவில்லை!

80 0

வெல்லவாய எல்லேவெல  நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற காத்தான்குடி  மற்றும் அக்கரப்பற்று பிரதேசங்களை  சேர்ந்த நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நீர்வீழ்ச்சியை  பார்வையிடச் சென்ற 10 பேர் கொண்ட குழு அங்கு குளிப்பதற்கு சென்ற போதே  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த இடத்தில் பல சந்தர்ப்பங்களில் குளிக்கச்சென்ற 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக இந்த இடம் சுற்றுலா பயணிகளுக்கு சிறிது காலம் மூடப்பட்டிருந்ததாகவும் பின்னர் திறக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.