இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

76 0

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கான நிதி உதவிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிவிவகார அiமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் செய்தியில் இதனை உறுதி செய்துள்ளார்.

எங்களிற்கான ஈஎவ்எவ்வை சர்வதேச நாணயநிதியம் அங்கீகரித்துள்ளதுஎன  அவர் தெரிவித்துள்ளார்.

இது நீண்ட பயணம் ஆனால் அனைவரினதும் கடினமான உழைப்பு அர்ப்பணிப்பு காரணமாக நாங்கள் சிறந்த நாட்களை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான நோக்கத்தை அடைவதற்கு பாடுபட்ட ஜனாதிபதிக்கும் இலங்கைக்கு கடன்வழங்கிய அனைவருக்கும் நன்றி என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.