நெற்றெற்ரால் தமிழாலயத்தில் மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

474 0

நெற்றெற்ரால் தமிழாலயத்தில் ஈழத்தமிழ்ப்மெருமகனார், மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் எட்டாவது ஆண்டு 18.03.2023 சனிக்கிழமை அன்று நினைவுகூரப்பட்டது.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் நாம் பலமிழந்து போகாமல் வாழ்வதற்கு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயாவின் நினைவு வணக்க நிகழ்வு மாணவர்களுக்கு வழிகாட்டி நிற்கும். பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு மாமனிதரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர், சுடர் வணக்கம் நிறைவடைந்ததும் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து நினைவுரை, கவிதை, சிறப்புரை என்பன நடைபெற்றது. பின்பு தமிழாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மாமனிதரின் நினைவாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

உடல் தளர்ந்த போதிலும் ஓய்வின்றி உளச்சோர்வின்றி உழைத்த மாமனிதரின் பணியைத் தொடர்ந்து செய்வோம் என்ற உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.