ஐ.எம்.எப். இடமிருந்து நாளை சாதகமாக பதில் கிடைக்கலாம் – செஹான் சேமசிங்க

67 0

ஐ.எம்.எப். உடனான சகல பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால், நாளை சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரியுள்ள, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பாகவும் அவர்கள் பரிசீலிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.