இலங்கையில் தமிழர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம்

197 0

இலங்கையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச் சரிதவியல் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை – குமரன்கடவளையில் இன்று காலை 3 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.அதேவேளை கிரிந்தவில் 2.6 ரிக்டர் அளவுகோலில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.