கொழும்பில் குடிசைகளில் வாழும் மக்களின் மீது அரசாங்கத்தின் கவனம் குறைவடைந்துள்ளது

235 0
கொழும்பில் குடிசைகளில் வாழும் மக்களின் மீது அரசாங்கத்தின் கவனம் குறைவடைந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்துக்கு உட்பட்ட பகுதியில் வாழும் சேரிப்புற மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
துரதிஷ்டவசமாக இதற்கு அரசாங்கத்தின் நேரடி நிதி ஒதுக்கீடுகள் எதுவும் கிடைக்கப்பெறுவதில்லை.
அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை பலனளிக்கவில்லை.
வடக்கு, கிழக்கிலும், மலையகத்திலும் வீடுகளை அமைப்பதற்கான விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி நிதி ஒதுக்கீடுகளையும் நேரடியாக வழங்குகின்றது.
எனினும், கொழும்பில் வாழும் சேரிப்புற மக்களுக்கு அவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.