குருநாகல், இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

74 0

குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல பிரதேசத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அலபாத, நிவித்திகல, கலவான மற்றும் எஹலியகொட பிரதேசங்களுக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று இரவு 7 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.