இலுப்பைக்கடவையில் பாடசாலை ஆசிரியர் விடுதிகளுக்கு வழங்கப்பட்ட மின்னிணைப்பை….(காணொளி)

257 0

மன்னார் இலுப்பைக்கடவையில் பாடசாலை ஆசிரியர் விடுதிகளுக்கு வழங்கப்பட்ட மின்னிணைப்பை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் திறந்துவைத்தார்.

மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை ரூபி முன்பள்ளி, அந்தோனியார்புரம் முன்பள்ளி, அந்தோனியார்புரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் விடுதி என்பனவற்றிற்கு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது 2016 ஆம் ஆண்டிற்கான பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் இருந்து நிதியை ஒதுக்கி மின்னிணைப்புக்களை வழங்கியிருந்தார்.

மின்னிணைப்பு வழங்கப்பட்ட இடங்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு சிறுவர்களை பார்வையிட்ட பா.டெனிஸ்வரன், உத்தியோகபூர்வமாக மின்னிணைப்பை திறந்துவைத்தார்.