ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதிவான் விசாரணையை எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (14) உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணை இன்று நீதிமன்றில் இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மரணம் தற்செயலானதா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐந்து பேர் கொண்ட விசேட மருத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

