அரசாங்கம் பதவி விலகி தேர்தலை நடத்தவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி மக்கள் புதிய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை இன்று ஆள்பவர்கள் மோசமான நிலையை உருவாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ள மல்கம் ரஞ்சித் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் முதுகெலும்பு இருந்தால் தங்கள் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் புதிய நிர்வாகத்தை மக்கள் தெரிவு செய்ய வாய்ப்பை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீதித்துறையை அவமதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

