மஹிந்தானந்த வெளிநாடு செல்ல தடைவிதித்து செயற்பட்ட இரு அதிகாரிகளை பணி இடைநிறுத்த தீர்மானம் !

41 0

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்வதற்காக நேற்று முன்தினம் (10) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றபோது, அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக மத்துகம நீதிமன்றில் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வெளிநாட்டுப் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமக்கு எதிராக மத்துகம நீதிமன்றத்தினால் அவ்வாறான எந்தவொரு வழக்கோ அல்லது வெளிநாட்டு பயணத்தடையோ விதிக்கப்படவில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்ய குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.