பிலக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்திடமுள்ள காணிகளையும் மீள ஒப்படைக்குமாறு மக்கள் இன்று போராட்டத்தை….(காணொளி)

271 0

இந்நிலையில், முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்திடமுள்ள காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி மக்கள் இன்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இராணுவத்திடம் பயன்பாட்டில் இருக்கின்ற 128 குடும்பங்களுக்குச் சொந்தமான 242 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரியே குறித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே கேப்பாப்பிலவு மக்கள் விமானப்படைத்தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிலக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் கொட்டகைகள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.