முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பயணத்தடையை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம மீதான தாக்குதல் தொடர்பில் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.