சைட்டம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை தேடி விசாரணை.

231 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பிரதேச சபையின் சாரதியை தேடி விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபரான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் நெருங்கிய உறவை வைத்துள்ளதுடன் , துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட தினத்தன்று அவர்கள் இருவருக்கும் இடையில் நீண்ட தொலைப்பேச்சு உரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை , மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடை செய்யக்கோரி கண்டியில் நேற்று மக்கள் பேரணியொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.