புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது

83 0

கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உபுல்தெனிய பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தெடிகம, ரனாகல, உடுகம்பொல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 41, 43 மற்றும் 46 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.