தமிழீழ மக்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி ஜெனிவாவில்- கவனயீர்ப்பு போராட்டம்

284 0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழீழமக்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 06.03.2023 இன்று பி.ப 2:00 மணியளவில் ,சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியது

இதன் போது ஜெனிவா ஐ நா சபை முன்றலில் அணிதிரண்ட தமிழர்கள் சர்வதேசத்திடம் தமிழர்களின் தாயகம் ,தேசியம் ,தன்னாட்சியுரிமை அடிப்படையிலான தமிழீழ தனியரசு ஒன்றே எமக்கு வேண்டும் என்றும் , தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்றும் மேலும் தமிழீழத்தேசியக்கொடியை ஏற்றி சர்வதேசத்திடம் தமிழர்களுக்கு தமிழீழ தனியரசு ஒன்றே தீர்வு என்பதை உறுதியுடன் எடுத்தியம்பினார்கள்.